ரூ.2,000 கோடி வருவாய் ஈட்டும் இணைய சூதாட்ட நிறுவனங்கள்

சென்னை: இணையம் வழி நடத்தப்படும் சூதாட்டத்தின் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

போனஸ் உள்ளிட்ட கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு அந்நிறுவனங்கள் மக்களை ஏமாற்றுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு குறிப்பிட்டது.

இணைய வழி சூதாட்டத்தை தடை செய்து தமிழக அரசு சட்டம் நிறைவேற்றி உள்ளது. இதற்கு சூதாட்ட நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அந்நிறுவனங்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது வழக்கமான சீட்டு (ரம்மி) விளையாட்டைவிட இணைய வழி நடைபெறும் சூதாட்டம் முழுக்க, முழுக்க மோசமானது என்று அரசு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாகவே இந்தச் சூதாட்ட விளையாட்டுக்கு தமிழக அரசு தடை விதித்தது என்று அவர் கூறினார்.

இணைய வழி சூதாட்டத்தில் பங்கேற்ற பலர் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமடைந்ததை அடுத்து அதற்கு தடைவிதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

அதை ஏற்று அச்சூதாட்டத்துக்குத் தடைவிதித்து தமிழக அரசு சட்டப்பேரவையில் மசோதா ஒன்றை நிறைவேற்றியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!