வால்பாறை: வால்பாறை அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் சிறுத்தை ஒன்று உலா வந்ததால் அப்பகுதியில் இரவுநேரப் பணியில் உள்ள மருத்துவர்கள் மற்றும் உள்நோயாளிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வால்பாறைப் பகுதியில் உள்ள மருத்துவமனையைச் சுற்றிலும் கிட்டத்தட்ட ரூ 9 கோடி ரூபாய் செலவில் கட்டடம் மற்றும் தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டு வருகிறது.
இருப்பினும் புதன்கிழமை நள்ளிரவில் சிறுத்தை ஒன்று வளாகத்திற்குள் நுழைந்து ஓடிய காட்சி கண்காணிப்பு கேமராக்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் இரவு நேரங்களில் குடியிருப்பு வாசிகள் நோயாளிகள் மருத்துவர்கள் அவ்வழியே மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை செய்துள்ளது.
மேலும் இதுபோன்ற சிறுத்தைகள் அடிக்கடி வளாகத்திற்குள் வருவதால் பணியில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் அச்சத்துடன் பணி செய்து வருகிறார்கள் எனவே வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.