சென்னை: வாகனமோட்டிகள் தலைக்கவசம் அணிவது தொடர்பாக தமிழக காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அந்த வகையில் ‘நம்ம ஹெல்மெட்’ என்ற பெயரில் புதிய விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சனிக்கிழமையமன்று சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர், இந்த விழிப்புணர்வு நிகழ்வின் ஓர் அங்கமாக 150 வாகனமோட்டிகளுக்கும், உடன் பயணித்தவர்களுக்கும் இலவச தலைக்கவசம் வழங்கினார்.

