சந்திரனை அடுத்து சூரியன், செப்டம்பர் 2 விண்ணில் பாய்கிறது ‘ஆதித்யா-எல்1’

பெங்களூரு: சந்திரயான் -3 வெற்றியைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்யத் தயாராகிவிட்டது இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்‌ரோ.

சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் ஆதித்யா-எல்.1 செப்டம்பர் 2ஆம் தேதி, காலை 11.50 மணிக்கு ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையத்திலிருந்து விண்ணில் ஏவப்படும் என்று அது திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட இஸ்‌ரோ விண்வெளி நிறுவனத்தால் தொடங்கப்படும் சூரியனைக் கண்காணிப்பதற்கான முதல் இந்திய விண்வெளிப் பணி இதுவாகும்.

ஆதித்யா-எல்1 என்ற இந்த செயற்கைக்கோள் விண்வெளியில் இருக்கக்கூடிய ஒரு ஆய்வுக் கூடமாக செயல்படவுள்ளது.

சூரியனை பற்றிய ஆய்வுக்காக உருவாக்கப்பட்டுள்ள ஆதித்யா-எல்1 செயற்கைக்கோள் படம்: இந்திய ஊடகம்

இந்த விண்கலம் முற்றிலும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டது. பெங்களூரில் உள்ள வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம், புனேயில் உள்ள வானியல் ஆராய்ச்சி மையம் ஆகியவை, இந்த விண்கல வடிவமைப்பில் முக்கிய பங்காற்றியுள்ளன.

இந்த விண்கலம், இரண்டு வாரங்களுக்கு முன், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்துக்கு கொண்டு வரப்பட்டது. இது நான்கு மாதம் பயணித்து, பூமியிலிருந்து கிட்டத்தட்ட 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள, ‘எல் 1’ என்ற மையப்புள்ளியில் நிலை நிறுத்தப்படும். அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும்.

சூரியனின் ஒளி மண்டலம், நிற மண்டலம், சூரியனின் வெளிப்புற அடுக்குகள், ஒளி வட்டம் ஆகியவற்றை பற்றி ஆய்வு செய்ய இதில் விஇஎல்சி (Visible Emission Line Coronagraph) என்ற தொலைநோக்கி, எஸ்யுஐடி ( Solar Ultraviolet Imaging Telescope) என்ற தொலைநோக்கி, ஏ ஸ்பெக்ஸ் ( Aditya Solar wind Particle Experiment) என்ற சூரிய காற்றின் தன்மைகளை ஆய்வு செய்யும் கருவி, சூரிய சக்தியை ஆராயும் பிஏபிஏ ( Plasma Analyser Package for Aditya ), சூரியனின் எக்ஸ்ரே கதிர்கள், வெப்பத்தை கண்காணிக்கும் சோலெக்ஸ் ( Solar Low Energy X-ray Spectrometer), சூரியனின் வெளிப்புற அடுக்குகளில் ஏற்படும் டைனமிக் மாற்றங்களை ஆராயும் ஹெல் 10எஸ் ( High Energy L1 Orbiting X-ray Spectrometer), கோள்களுக்கு இடையேயான காந்த புலதன்மையை அளவிடும் மேக்னோ மீட்டர் முதலிய ஏழு முக்கிய கருவிகள் உள்ளன.

ஆதித்யா செயற்கைக்கோள் தற்போது ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதை பிஎஸ்எல்வி- எக்ஸ்எல் (சி57) என்ற ராக்கெட் மூலம், செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

ஆதித்யா-எல்1 திட்டம் மூலம் சூரியனின் வெளிப்பகுதியில் நிலவும் வெப்ப மாறுபாடுகளை கண்டறிவதுடன், சூரியப் புயல்களின் தாக்கங்களையும் கண்டறிய முடியும்.

Remote video URL
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!