அக்டோபர் 9ல் சட்டமன்றம் கூடுகிறது

அக்டோபர் 9ல் சட்டமன்றம் கூடுகிறது

1 mins read
233451ed-a1d0-49c4-b049-49cc8c9807ec
தமிழ்நாட்டின் சட்டமன்றம் அக்டோபர் 9ஆம் தேதி கூடுகிறது என்று சபாநாயகர் புதன்கிழமை தெரிவித்தார். - படம்: தமிழக ஊடகம் 

சென்னை: தமிழ்நாட்டின் சட்டமன்றம் அக்டோபர் 9ஆம் தேதி கூடுகிறது என்று சபாநாயகர் புதன்கிழமை தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்றத்தை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது பற்றி அலுவல் ஆய்வுக் குழு முடிவுசெய்யும் என்று கூறினார்.

இதனிடையே, சபாநாயகர் கூட்டி இருக்கும் அடுத்த மாத சட்டமன்றக் கூட்டத்தில் 2023-2024ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவு தொடர்பான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும் என்று சட்டமன்றச் செயலாளர் சீனிவாசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்