நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து அக்டோபரில் தொடங்குகிறது

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து அக்டோபரில் தொடங்குகிறது

1 mins read
af1d1a0d-974c-4e6c-9dff-e7198ec221f0
நாகப்பட்டினம் - இலங்கை கப்பல் பயணச் சேவை குறித்து செய்தியாளர் கூட்டத்தில் பேசும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு. - படம்: ஊடகம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து, 60 கடல் மைல்கள் தொலைவில், இலங்கையிலுள்ள காங்கேசன் துறைமுகத்திற்குக் கப்பல் இயக்குவதற்கான நடவடிக்கைகள் தமிழ்நாடு கடல்சார் வாரியம், மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை மற்றும் வெளியுறவுத் துறை மற்றும் தமிழக அரசு இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

நாகப்பட்டினம் துறைமுக கால்வாய் தூர்வாருதல், பயணியர் முனையம் அமைப்பது போன்ற பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகள் 10 நாள்களுக்குள் நிறைவு பெற்று, அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் கப்பல் சேவை தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தமிழ் நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்