தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திட்டக்குடி பெண் அர்ச்சகர்களுக்கு அமைச்சர் நேரில் வாழ்த்து

1 mins read
d5bf7fa9-a6d3-44bf-90a4-00841c53e107
ரம்யா, கிருஷ்ணவேணி, முத்துவேல் ஆகியோர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசனை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். -

விருத்தாச்சலம்: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அர்ச்சகர் பயிற்சி பெற திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர், மதுரை, திருவரங்கம், சென்னை ஆகிய நகரங்களில் பயிற்சி பள்ளிகள் உள்ளன. இங்கு ஓராண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 94 பேரில் மூன்று பெண்கள் முதல்முறையாக அர்ச்சகர் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றுள்ளனர். அவர்களில் இரண்டு பெண் அர்ச்சகர்களும் ஒரு ஆண் அர்ச்சகரும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசனை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.

குறிப்புச் சொற்கள்