கீழடியில் முடிவுக்கு வந்தது ஒன்பதாம் கட்ட அகழாய்வு

சிவகங்கை: கீழடியில் நடைபெற்று வந்த ஒன்பதாம் கட்ட அகழாய்வுப் பணிகள் சனிக்கிழமையுடன் (நேற்று) நிறைவடைந்தன.

இதையடுத்து அடுத்தக்கட்ட அகழாய்வு நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் எட்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுப் பணிகளின்போது ஏராளமான அரிய பொருள்கள் கிடைத்துள்ளன.

இதையடுத்து ஒன்பதாம் கட்ட அகழாய்வு நடைபெற்று வந்தது. இம்முறை கோள வடிவிலான எடை கல், பாம்பு உருவ சுடுமண் பொம்மை உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

கொந்தகை பகுதியில் இரண்டு குழிகள் தோண்டப்பட்டு 25 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. அவற்றுள் 14 தாழிகள் திறக்கப்பட்டபோது, அவற்றுள் எலும்புக்கூடுகள், மண்டை ஓடுகள், சுடுமண் கிண்ணம் ஆகியவை கிடைத்துள்ளன.

அவற்றை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஒன்பதாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!