இஸ்‌ரேல் பதற்றம்: கொடைக்கானலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

திண்டுக்கல்: இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் காரணமாக தமிழ்நாட்டின் கொடைக்கானலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

இஸ்‌ரேல் மீதமான பயங்கரவாத தாக்குதலை அடுத்து தமிழகத்தின் கொடைக்கானல் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் யூத குடியேற்றங்கள் உள்ளன. வட்டக்கானல் பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் முகாமிடுவதும் கூட்டு பிரார்த்தனை நடத்துவதும் வழக்கம் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெருமளவிலான இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வருகின்றனர் என்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் பலரும் கொடைக்கானலில் வந்து ஓய்வெடுத்து செல்வது வழக்கம் என்றும் ஏசியா நெட் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

எனவே இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே எப்போது பிரச்சினை ஏற்பட்டாலும் கொடைக்கானல் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்தியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் சிலர் கைது செய்யப்பட்டபோது, கொடைக்கானல் உள்ள இஸ்ரேலியர்களை தாக்கவும் கொலை செய்யவும் அவர்கள் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

“இந்நிலையில் கொடைக்கானலுக்கு வரும் யூதர்கள், இஸ்ரேலியர்களை கண்காணிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,” என ஊடகச் செய்தி மேலும் தெரிவிக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!