தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னை ஏரிகளில் தேவையான தண்ணீர் உள்ளது

1 mins read
7ea9773b-c199-4b22-a9ce-49bdb6acdf67
படம்: - தமிழ் முரசு

திருவள்ளூர்: சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளன.

அந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 9.817 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 83 விழுக்காடு என்று தமிழக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த தண்ணீரை சென்னை குடிநீருக்கு தட்டுப்பாடின்றி 9 மாதத்திற்கு விநியோகம் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பருவமழை தொடங்குவதற்கு முன்பே குடிநீர் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் அடுத்த ஆண்டு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்