திருச்சி: காலஞ்சென்ற முதல்வர் எம்ஜிஆரின் உருவச்சிலை சேதப்படுத்தப்பட்டதால் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி பகுதியில் பதற்றம் நிலவியது.
சனிக்கிழமை நள்ளிரவு சிலர் சிலையை சேதப்படுத்தியதை அடுத்து அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பு நிலவியது.
சிலையை சேதப்படுத்தியவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி ஞாயிற்றுக்கிகழமை அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.