தமிழகத்தில் மாரடைப்பு அதிகம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கொவிட்-19 கொள்ளைநோய்க்குப் பிறகு தமிழகத்தில் மாரடைப்பு அதிகரித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

சென்னையில் ‘நல நடைபாதை’ (ஹெல்த் வாக்) சாலையை ஆய்வு செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், நவம்பர் 4 ஆம் தேதி தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் 8 கிலோ மீட்டர் நீளமுள்ள ‘ஹெல்த் வாக்’ சாலை தொடங்கப்படவுள்ளது. பெசன்ட் நகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.

“நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களின் வசதிக்காக காலை 5 முதல் 8 மணி வரை பெசன் நகர் அவென்யூ சாலைகளில் கனரக வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை. மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை சுகாதாரத் துறையின் சார்பில் ‘ஹெல்த் வாக்’ நடைபெறும் இடங்களில் மருத்துவ முகாமும் நடைபெற உள்ளது.

“கொவிட்-19 கொள்ளைநோய் காலத்திற்குப் பிறகு அண்மைக்காலமாக இளம் வயதினர் உள்பட பலருக்கு மாரடைப்பு அதிகரித்து வருகிறது. மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பு அதிகரித்துள்ள நிலையில் இளம்வயது மரணங்களை தடுப்பதற்கு அரசின் இந்த சீரிய ஏற்பாடு உதவக்கூடும்.

“நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் அதற்கு அவசியம். எட்டு கிலோ மீட்டர் தூரம் நடக்கும்போது 10,000 காலடிகள் (ஸ்டெப்ஸ்) வரும். இது நாள்தோறும் ஒரு மனிதர் நடக்கவேண்டிய தூரம் என சுகாதார விதிகள் கூறுகின்றன,” என்றார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!