தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய 3 அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்வரத்து அதிக அளவில் காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உரிய நேரத்தில் அருவியில் குளிக்கத் தடை விதித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது. தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.