கோவை: கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் மேலும் ஒருவரை கோவை காவல் துறை கைது செய்து உள்ளது.
அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாக குண்டு வெடிப்பு வழக்கை கையாளும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கடந்த ஆண்டு கோவையில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு சென்று கொண்டு இருந்த கார் திடீரென வெடித்து சிதறியது. அந்தக் காரில் குண்டு வைக்கப்பட்டு இருந்தது எனப் பின்னர் தெரிய வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே 13 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து உள்ளனர். இந்நிலையில் 27 வயதான தாஹா நசீர் என்பவர் சிக்கியுள்ளார்.
இவர் தனியார் கார் பராமரிப்பு நிறுவனத்தில் வர்ணம் பூசுபவராக பணியாற்றி வருவதாகவும் கார் குண்டு வெடிப்பு குறித்து நசீருக்கு முன்கூட்டியே பல்வேறு தகவல்கள் தெரியும் என்றும் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.