சென்னை : கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர்.
சென்னையில் உள்ள கோவில்களில் மாலை அணிந்து கொள்வதற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கார்த்திகை முதல் நாளன்று அய்யப்ப பக்தர்கள் அதிகாலையிலேயே கோவில்களில் குவிந்தனர். பின்னர், வரிசையில் நின்று மாலை அணிந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அருவியில் புனித நீராடி பக்தர்கள் சரண கோஷம் முழங்க மாலை அணிந்துகொண்டனர்.

