தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவித்தது இலங்கை

ராமேசுவரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேரை அந்நாடு உடனடியாக விடுதலை செய்துள்ளது.

அந்த 22 மீனவர்களும் சனிக்கிழமை அன்று கைதாகினர். இதையடுத்து, தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் வலியுறுத்தினர்.

இந்நிலையில், ராமேசுவரம் சென்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மீனவர்களின் உறவினர்கள் சந்தித்துப் பேசினர்.

அப்போது கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக 22 மீனவர்களும் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் நாட்டுப் படகுகள் மூலம் ராமேசுவரத்துக்கு அழைத்து வரப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, 22 மீனவர்களைக் கைது செய்த இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனம் ராமதாஸ் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!