கோவை நகைக்கடைக் கொள்ளை: 200 பவுன் நகைகள் மீட்பு

கோயம்புத்தூர்: கோவை காந்திபுரத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் கடந்த நவம்பர் 28 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் முகமூடி அணிந்த கொள்ளையர் ஒருவர், அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த கிட்டத்தட்ட 200 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

கொள்ளையனைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில், கோயம்புத்தூர் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 200 பவுன் நகைகளை காவல்துறையினர் தற்போது மீட்டுள்ளனர்.

கொள்ளையில் ஈடுபட்டது தர்மபுரி மாவட்டத்தின் அரூரை சேர்ந்த விஜயகுமார் என தெரியவந்துள்ளது.

வீட்டில் பதுக்கி வைத்திருந்த நகைகளை விஜயகுமாரின் தாயாரிடம் இருந்து காவல்துறை அதிகாரிகள் மீட்டனர்.

கொள்ளையடித்த விஜயகுமார் இன்னும் தலைமறைவாக இருந்து வருகிறான். விஜயகுமாரைத் தனிப்படை காவல்துறையினர் தர்மபுரியில் முகாமிட்டு தேடி வருகின்றனர். விஜயகுமாருக்கு தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!