கோவை நகைக்கடை கொள்ளை: பக்கபலமாக இருந்த மனைவி

கோவை: கோவை நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வரும் கொள்ளையன் விஜய் விரைவில் பிடிபடுவார் என்று கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தக் கொள்ளை விவகாரத்தில் விஜய்க்கு அவரது மனைவி நர்மதா பக்கபலமாக இருந்தது தெரிய வந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

கோவையில் இயங்கி வரும் ஜோஸ் ஆலூக்காஸ் நகைக்கடையில் இருந்து மொத்தம் 4.6 கிலோ நகைகளை கொள்ளை அடித்துள்ளார் விஜய். அவர் மீது ஏற்கெனவே மூன்று திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனினும் அவரது மனைவி மீது எத்தகைய வழக்கும் இதுவரை பதிவாகவில்லை.

ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையின் ஒரு பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததால் எச்சரிக்கை மணி (அலாரம்) அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி கொள்ளை அடித்துள்ளார் விஜய்.

இந்த கொள்ளையை அரங்கேற்றுவதற்கு உறுதுணையாக இருந்த விஜய்யின் மனைவி நர்மதாவிடம் இருந்து மூன்று கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளன. தர்மபுரி மாவட்டம் அருர் பகுதியில் பதுங்கி இருந்த விஜய்யை காவல்துறையினர் பிடிக்க முயன்றபோது அவர் தப்பி விட்டார். அவரைக் கைது செய்யும் பட்சத்தில் திருடப்பட்ட மொத்த நகைகளும் மீட்கப்பட்டுவிடும் என்றும் தனிப்படை போலிசார் அவரை நெருங்கி விட்டனர் என்றும் ஆணையர் பாலகிருஷ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!