சென்னை: மதுராந்தகத்திற்கு அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. அங்குள்ள ஏரிக்கு வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான புதிய பறவைகள் வந்த வண்ணம் உள்ளன.
அதிகமான நீர் வரத்தாலும், பருவமழைக்குப் பின்னர் காணப்படும் குளிர்ச்சியான சூழலாலும் ஏராளமான பறவைகள் வேடந்தாங்கலைத் தேடி வந்த வண்ணம் உள்ளன.

