சென்னை: ஆளுநர் மாளிகை அருகே தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் வெள்ளிக்கிழமையன்று ஆய்வு மேற்கொண்டனர்.
கடந்த அக்டோபர் 25ஆம் தேதி ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் குறித்து என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.
இது தொடர்பாக கருக்கா வினோத் என்ற 42 வயது ரவுடி கைது செய்யப்பட்டார். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பெட்ரோல் குண்டுகளை வீசியதாக கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்துள்ள போதிலும் இந்த தாக்குதலின் பின்னணியில் வேறு சில காரணங்கள் இருப்பதாக பாஜக உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்தன.
இதையடுத்து, கருக்கா வினோத்தை என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளது. முன்னதாக, ஆளுநர் மாளிகை அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவல் பிரிவைச் சேர்ந்த காவலரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் தவியல் அதிகாரிகளும் என்ஐஏ அதிகாரிகளும் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.