சென்னை: ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவர் ஒருவர் பணிச்சுமையின் காரணமாக இறந்ததாக சில ஊடகங்கள் அபாண்டமாக குற்றம் சாட்டுகின்றன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
“இறந்த மருத்துவ மாணவர் பணியில் சேர்ந்து 6 நாள்கள்தான் ஆகின்றன. அவருக்கு ஒருநாள் கூட பணி ஒதுக்கப்படவில்லை ,”என அவர் மேலும் தெரிவித்தார்.
அவராகவே ஒரு அறுவை சிகிச்சையில் பார்வையாளராகக் கலந்துகொண்டார் எனவும் இப்படி இருக்கும் நிலையில் அவர் எப்படி பணிச்சுமையின் காரணமாக இறந்திருக்கக்கூடும் எனவும் அவர் கூறினார்.