சென்னை: சென்னை எண்ணூர் கழிமுகத்தில் தேங்கியுள்ள நீரில் ஃபீனால், எண்ணெய், கிரீஸ் ஆகியவை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கொசஸ்தலை ஆற்றின் கழிமுக நீரில் ஒரு லிட்டர் தண்ணீரில் 48.4 மி.கி. ஃபீனால் கலந்துள்ளது.
இந்நிலையில், எண்ணூர் கழிமுகம் அருகே எண்ணெய்க் கழிவு முழுமையாக அகற்றப்படும் என்று தெரிவித்த தமிழக சுற்றுச்சூழல், வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, பாதிப்பு குறித்துக் கணக்கெடுத்து இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.