தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எண்ணூர் கடல் நீர் கழிவு குறித்த ஆய்வு முடிவுகள் வெளியீடு

1 mins read
9480eef4-1bd9-4a1e-ad36-2b94c7f7f757
படம் - ஊடகம்

சென்னை: சென்னை எண்ணூர் கழிமுகத்தில் தேங்கியுள்ள நீரில் ஃபீனால், எண்ணெய், கிரீஸ் ஆகியவை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கொசஸ்தலை ஆற்றின் கழிமுக நீரில் ஒரு லிட்டர் தண்ணீரில் 48.4 மி.கி. ஃபீனால் கலந்துள்ளது.

இந்நிலையில், எண்ணூர் கழிமுகம் அருகே எண்ணெய்க் கழிவு முழுமையாக அகற்றப்படும் என்று தெரிவித்த தமிழக சுற்றுச்சூழல், வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, பாதிப்பு குறித்துக் கணக்கெடுத்து இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்