சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதி, கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகம் உள்ளிட்ட இடங்களை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வெள்ளம் வடிந்த பகுதிகளில் பொதுச் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை மொத்தம் 57,192 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது. சாலைகளில் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீர்செய்யும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன,” என்றார்.