வரத்து குறைந்ததால் காய்கறிகள் விலை உயா்வு

வரத்து குறைந்ததால் காய்கறிகள் விலை உயா்வு

1 mins read
8bc513da-86c9-401c-b278-4d78c3fec128
படம் - ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது.

அந்த வகையில், கடந்த வாரத்தைக் காட்டிலும் ஒரு கிலோ காய்கறி, மொத்த விற்பனையில் ரூ. 20 வரையும் சில்லறை விற்பனையில் ரூ.50 வரையும் உயா்ந்துள்ளது.

முகூா்த்த நாள்கள், பண்டிகைக் காலங்கள் நெருங்குவதால் இன்னும் இரு வாரங்களுக்கு இந்த விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கோயம்பேடு காய்கறிச் சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

குறிப்புச் சொற்கள்