தமிழ்நாட்டுக்கு ரூ.75,000 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு

தமிழ்நாட்டுக்கு ரூ.75,000 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு

1 mins read
5375712b-6ba2-47c1-aae8-88d9d87d8215
படம் - ஊடகம்

புதுடெல்லி: தேசிய சமூக உதவித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டம், ஊரக சுயவேலை வாய்ப்புப் பயிற்சித் திட்டம் உட்பட தமிழ்நாட்டில் எட்டு மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்காக, கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.75,000 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக மக்களவையில் மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சா் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்து மூலம் அளித்த விளக்கத்தில் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்