திருவரங்கத்திற்கு பேருந்து நிலையம் வருகிறது

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருவரங்கம் கோயிலுக்கு வந்துசெல்லும் ஏராளமான பக்தர்களின் வசதிக்காகவும் அங்கு வசிக்கும் உள்ளூர் மக்களின் வசதிக்காகவும் அங்கு பேருந்து நிலையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

திருவரங்கத்தில் இதுவரை உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் பேருந்துகள், சுற்றுலாப் பேருந்துகளுக்கு என தனியாக பேருந்து நிலையம் எதுவும் இல்லை.

வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து அங்கு வரும் சுற்றுலாப் பேருந்துகள் யாவும் சாலையோரமாகவே நிறுத்திவைக்கப்படுகின்றன. அதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

திருவரங்கத்தில் பேருந்து நிலையம் கட்டுவதற்கு அவ்வூர் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை *விடுத்து வருகின்றனர்.

இப்போது, அங்கு அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், பேருந்து நிலையம் கட்டுவதற்கு தமிழக அரசு உத்தரவு அளித்துள்ளது.

அதையடுத்து, மாநகராட்சிக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் கட்டப்படும் பேருந்து நிலையம் திருவரங்க அரசு மருத்துவமனைக்கு எதிரில் அமையவிருக்கிறது. பேருந்து நிலையம் அமைக்கும் பணி துவக்க விழாவில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!