ராமேஸ்வரம்: இலங்கைக் கடற்படையினரால் நவம்பர் மாதம் 6ஆம் தேதி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் எட்டுப் பேர் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டனர்.
வவுனியா சிறையில் அடைக்கப்பட்ட எட்டு மீனவர்களையும் மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. மீனவர்கள் 8 பேரும் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.