ஆதிச்சநல்லூர் அகழாய்வுக் குழிகள், அருங்காட்சியகத்தை மூழ்கடித்த வெள்ளம்

ஆதிச்சநல்லூர்: அண்மையில் பெய்த கனமழையில் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகமும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள தொல் பொருள்கள் வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்துள்ளன.

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் மத்திய அரசின் சார்பில் ரூ.5 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.

அங்கு நடைபெற்ற அகழாய்வின்போது ஏராளமான தொல்லியல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும் அந்த அரிய பொருள்களை முதற்கட்டமாக தற்காலிக அருங்காட்சியகம் ஒன்றை அமைத்து காட்சிப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில், அண்மைய கனமழை இ்ந்த அருங்காட்சியகத்தையும் விட்டு வைக்கவில்லை.

ஆதிச்சநல்லூரில் உள்ள அகழாய்வுக் குழிகளை வெள்ள நீர் மூழ்கடித்துள்ளது. மேலும் அங்குள்ள முதுமக்கள் தாழி உள்ளிட்ட தொல்பொருள்களும் வெள்ளத்தில் சிக்கி உடைந்து சேதமடைந்துள்ளன.

அருங்காட்சியகத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சுவரும் வெள்ளத்தில் சேதமடைந்துள்ளதாகத் தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

இதனிடையே, சேதமடைந்த தொல்லியல் பொருள்களை இனி முறையாக பாதுகாக்க வேண்டும் என தொல்லியல் ஆர்வலர் முத்தாலங்குறிச்சி காமராசு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், தற்காலிக அருங்காட்சியகத்தை விரைவில் சீரமைத்து மீண்டும் பொதுமக்கள், மாணவ, மாணவியரின் பார்வைக்கு திறக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!