ஜனவரி 2ல் திருச்சி விமான நிலைய புதிய முனையம் திறப்பு

திருச்சி: எதிர்வரும் ஜனவரி 2ஆம் தேதியன்று, திருச்சி அனைத்துலக விமான நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள முனையத்தைப் பிரதமர் மோடி திறந்துவைக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ.951 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களைத் திருச்சி மாநகக்ர காவல் ஆணையர் நேரில் பார்வையிட்டார்.

திருச்சி விமான நிலைய ஒருங்கிணைந்த முனையம் 60,723 சதுரமீட்டர் பரப்பளவில் இரு அடுக்குகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரே சமயத்தில் 4,000 அனைத்துலகப் பயணிகளையும் 1,500 உள்நாட்டு பயணிகளையும் கையாள முடியும்.

புதிய முனையத்தில் தமிழகக் கலாசார, பண்பாடு, திருவிழாக்களை மையமாகக் கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும், ஸ்ரீரங்கம் கோவில் ராஜகோபுரம் போன்ற மாதிரி கோபுரம் புதிய முனையத்தின் முகப்பில் இடம்பெற்றுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!