விஜயகாந்தின் மறைவு வேதனை அளிக்கிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி

விஜயகாந்தின் மறைவு வேதனை அளிக்கிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி

1 mins read
d9c4f8db-1c9e-4cd9-8e50-0ca8783061da
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “சிறந்த நடிகரும், அர்ப்பணிப்புள்ள தலைவரும், சிறந்த மனிதநேயவாதியுமான விஜயகாந்த் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. சினிமா, அரசியல், சமூக சேவை ஆகியவற்றில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும் அவரின் எண்ணற்ற ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல். ஓம் சாந்தி!” என்று தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்