கீழடியில் 9 மாதங்களில் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட 4.5 லட்சம் பார்வையாளர்கள்

கீழடி: கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் கீழடியில் உள்ள அருங்காட்சியகத்தை ஏறக்குறைய 4.5 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருள்களை சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வெகுவாகக் கண்டு ரசிப்பதாக அருங்காட்சியக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கீழடி அகழாய்வின்போது தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும் ஏராளமான தொல்பொருள்கள் கிடைத்துள்ளன.

அவை அங்கு அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

மொத்தம் இரண்டு ஏக்கரில் பத்து கட்டட தொகுதிகளுடன் ரூ.18.40 கோடி செலவில் இந்த அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. அங்கு 13,800 பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்தாண்டு மார்ச் 5ஆம் தேதி அருங்காட்சியகம் திறக்கப்பட்ட பின்னர் நாள்தோறும் குறைந்தபட்சம் 1,500 பேர் வந்து செல்கின்றனர். தற்போது நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

2,600 ஆண்டுகளுக்கு முந்தைய பொருள்களைப் பார்க்க முடியும் என்பதால் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வருகை தருவதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!