தமிழக மீனவர்கள் 32 பேர் கைது; 5 படகுகள் பறிமுதல்

புதுக்கோட்டை: தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீனவர் களின் ஐந்து படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

பண்டிகை வேளையில் இலங்கை கடற்படை மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலவுகிறது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் 250 விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் சென்று இருந்தனர்.

யாழ்ப்பாணம் கடற்பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்து சேர்ந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளை சுற்றிவளைத்தனர்.

இதையடுத்து ஐந்து விசைப் படகுகளை பறிமுதல் செய்த கடற்படையினர், விசாரணை என்ற காரணத்தைக் கூறி 32 மீனவர்களை கைது செய்தனர்.

கைதான மீனவர்கள் காங்கேசன் துறை கடற்படை முகாமில் தங்கவைக்கப் பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!