சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி பேருந்து, ரயில்கள் மூலம் 10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
“கடந்த 12ஆம் தேதி முதல் சுமார் 6.4 லட்சம் பேர் அரசு சிறப்புப் பேருந்துகள் மூலமாகவும் ரயில்கள், விமானங்கள் மூலம் 4 லட்சம் பேரும் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.
“மொத்தத்தில் ஏறக்குறைய 10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்,” என்று அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்தார்.

