தமிழகத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்தது

சென்னை: தமிழகத்தில் குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு கணக்கின்படி, ஒவ்வொரு ஆயிரம் குழந்தைகளுக்கும் 13% என்ற அளவில் இறப்பு விகிதம் இருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போது இறப்பு விகிதம் ஆயிரம் குழந்தைகளுக்கு 8.2% ஆகக் குறைந்துள்ளது என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு குழந்தைகள் நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வந்ததால் இறப்பு விகிதம் குறைந்துள்ளது என்றார் மா.சுப்பிரமணியன்.

“சிசு இறப்புகளைக் குறைப்பதற்கு அனைத்து மாவட்டங்களிலும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் குழந்தைகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து விவரங்களைச் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது,” என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!