திண்டுக்கல்: தாடிக்கொம்பு ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளை முட்டியதில் செபஸ்தியார் என்பவர் உயிரிழந்தார்.
உலகம்பட்டி பெரிய அந்தோணியார் கோயில் திருவிழா ஜல்லிகட்டில் மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். மாடு முட்டி காயமடைந்த காமாட்சிபுரத்தைச் சேர்ந்த செபஸ்தியார் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
உலகம்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் 4 சுற்றுகள் முடிவில் காளைகள் முட்டியதில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
திண்டுக்கல் அருகே உலகம்பட்டியில் புனித பெரிய அந்தோணியார் கோவில் திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் 750 காளைகளும் 430 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
மதுரை, திருச்சி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் 500 காளைகள் கலந்துகொண்டன. ஜல்லிக்கட்டுப் போட்டியை கோட்டாட்சியர் கொடியசைத்து துவங்கி வைத்தார்.