தேர்தல் கூட்டணிக்கு மநீம இரண்டு நிபந்தனைகள் விதிப்பு

சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும் தமிழக மக்களின் நலனிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி எத்தகைய சமரசத்துக்கும் இடம் கொடுக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கட்சித் தலைவர் கமல்ஹாசனின் சிந்தனைகளோடும் கொள்கைகளோடும் ஒத்துப்போகும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என்றும் மநீம திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அவசர நிர்வாகக்குழு, செயற் குழுக் கூட்டம், சென்னையில் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கட்சி அறிவித்துள்ள இரண்டு நிபந்தனைகளை ஏற்காத கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள நாற்பது தொகுதிகளிலும் போட்டியிட மநீம தயங்காது என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

மேலும், ‘கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன். தேர்தல் பணிகளை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்’ என கமல் அறிவுறுத்தி உள்ளதாகவும் கட்சியினர் கூறியதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. தமிழக அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கி உள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!