பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு சீர்வரிசையுடன் வந்த இந்து சமயத்தினர்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே ஆலம்பட்டு- குருந்தம்பட்டு கிராமம் உள்ளது. அப்பகுதியில் இருக்கும் 350 ஆண்டுகள் பழமையான ரஹ்மத் ஜும்மா பள்ளிவாசலில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. அதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடந்தது.

மத ஒற்றுமையைப் போற்றும் வகையில், அக்கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மற்ற கிராமத்தைச் சேர்ந்த இந்து சமயத்தைச் சேர்ந்த மக்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர். விழாவில் கலந்துகொண்ட இந்து சமய பெண்கள் தேங்காய், பழங்கள் போன்ற பொருள்களைச் சீர்வரிசைகளாக கொண்டு வந்தனர். அவர்களை இஸ்லாமிய சமயத்தினர் வரவேற்றனர். இப்பள்ளிவாசலை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா திறந்து வைத்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!