காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே ஆலம்பட்டு- குருந்தம்பட்டு கிராமம் உள்ளது. அப்பகுதியில் இருக்கும் 350 ஆண்டுகள் பழமையான ரஹ்மத் ஜும்மா பள்ளிவாசலில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. அதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடந்தது.
மத ஒற்றுமையைப் போற்றும் வகையில், அக்கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மற்ற கிராமத்தைச் சேர்ந்த இந்து சமயத்தைச் சேர்ந்த மக்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர். விழாவில் கலந்துகொண்ட இந்து சமய பெண்கள் தேங்காய், பழங்கள் போன்ற பொருள்களைச் சீர்வரிசைகளாக கொண்டு வந்தனர். அவர்களை இஸ்லாமிய சமயத்தினர் வரவேற்றனர். இப்பள்ளிவாசலை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா திறந்து வைத்தார்.