தொழிலதிபர் வீட்டில் மூவர் மரணம்; கடன் சுமையா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை

சேலம்: சேலம் மாசிநாயக்கன்பட்டியில் உள்ள இந்திரா நகரைச்  சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவர் தன் மகனான 30 வயது ரிஷிகேஷ்வரனுடன் சேர்ந்து நோட்டு புத்தகங்களுக்கு ஒட்டப்படும் ரசாயனம் தயாரிக்கும் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை வெங்கடேஸ்வரனின் மனைவி நிர்மலா அவரது உறவினரைப் பார்ப்பதற்காக தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். பின்னர் மாலை வீடு திரும்பியபோது, தனது 23 வயது மகள் பூஜா கழுத்து நெரிக்கப்பட்டு பிணமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பூஜாவுக்கு அருகே விட்டத்தில் உள்ள இரும்புக் கம்பியில் வேட்டி, சேலையில் வெங்கடேஸ்வரனும், ரிஷி கேசவனும் துாக்கில் தொங்கியபடி பிணமாகக் கிடந்தனர்.

மூவரையும் பிணமாகக் கண்ட நிர்மலா அலறி துடித்தார். அவரது சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் மூவரும் இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

அம்மாபேட்டை காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடன் சுமையால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.

இருப்பினும் மூவரின் இறப்பிலும் மர்மம் நீடிப்பதால் காவல்துறை தொடர்ந்து அவரது மனைவியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!