உயிருக்குப் போராடும் முருகன்: நளினியின் கண்ணீர் வேண்டுகோள்

திருச்சி: உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் முருகனைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, முருகனின் மனைவி நளினி கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன், திருச்சி சிறப்பு முகாமில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அவரது மனைவி நளினி கூறியுள்ளார்.

முருகனை காப்பாற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேலூர் சிறையைவிட திருச்சி சிறப்பு முகாம் கொடுமையாக உள்ளது என்றும் நளினி தெரிவித்துள்ளார்.

சிறப்பு முகாமில் காவல்துறையினர் தங்களை சுதந்திரமாக இருக்க விடுவதில்லை என்று முருகன், ராபர்ட் பயாஸ் ஆகிய இருவரும் புகார் எழுப்பி உள்ளனர்.

தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி, இருவரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், திருச்சி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு தமது கணவர் உயிருக்குப் போராடுவதாக முருகனின் மனைவி நளினி கடிதம் வழி தெரிவித்துள்ளார்.

கடந்த 12 நாள்களாக தமது கணவர் எதுவும் சாப்பிடாமல், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் சிறப்பு முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்படாததால், கணவரின் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் நளினி தமது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!