விபத்தில் மாயமான வெற்றி: விபத்துப் பகுதியில் கிடைத்த மூளைப்பகுதி; மரபணு பரிசோதனை நடத்த காவல்துறை முடிவு

சென்னை: சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியைத் தேடும் நடவடிக்கைகள் எட்டு நாள்களாக நீடித்து வருகிறது.

இமாச்சலப் பிரதேசத்தில் வெற்றி சென்ற கார் விபத்துக்குள்ளானது. இந்நிலையில் விபத்து நடைபெற்ற பகுதியில் மனித மூளை பகுதி ஒன்றை மீட்புக் குழுவினர் கைப்பற்றி உள்ளனர்.

அது யாருடையது என்பதை உறுதி செய்ய, மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கைப்பற்றப்பட்ட மூளையில் இருந்து திசுப் பகுதியும் ரத்த மாதிரியும் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவை சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சனிக்கிழமை இரவு சைதை துரைசாமி, அவரது மனைவியின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுகள் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!