ராமநாதபுரத்தில் பணம் கொழிக்கும் தொழில்

2 mins read
bdf64c7e-5451-4d86-80f9-58ea178da5ab
அதானி குழுமத்தால் உருவாக்கப்பட்ட உலகின் ஆகப்பெரிய ஒற்றை-இட சூரிய மின்சக்தி திட்டங்களில் ஒன்றான கமுதி திட்டம் 2,65,000 வீடுகளில் ஒளிரும் என ஆலை அதிகாரிகள் தெரிவித்தனர். - படம்: இந்திய ஊடகம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தியில் பெரும் பணம் ஈட்டி வருகிறது அதானி நிறுவனம்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 2,500 ஏக்கர் பரப்பளவில் 648 மெகாவாட் மின் உற்பத்தி திறன் உள்ள சோலார் மின் உற்பத்தி நிலையத்தை அதானி நிறுவனம் அமைத்துள்ளது.

2015ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த மின் நிலையத்தில் தினம்தோறும் 30 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுவரை மொத்தம் 840 கோடி யூனிட் மின்சாரத்தை இது உற்பத்தி செய்துள்ளது. ஒரு அனல் மின் நிலையம் 840 கோடி யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய 77 லட்சம் மெட்ரிக் டன் கார்பனை வெளியேற்றியிருக்கும். கமுதியில் ஆண்டுக்கு 200 நாட்களுக்கு மேல் அதிக சூரிய ஒளி கிடைப்பதால் ஆண்டு முழுவதும் மின் உற்பத்தி அதிகமாக நடக்கிறது. குறிப்பாக மார்ச் முதல் மே வரை அதிக சூரிய ஒளி காரணமாக மின் உற்பத்தியும் அதிகமாக நடக்கிறது.

இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் மூலம் 2.64 லட்சம் வீடுகளுக்கு மின்சாரத்தை விநியோகிக்க முடியும். இதன் மூலம் கோடிகளில் வருமானம் ஈட்டி வருகிறது அதானி நிறுவனம்.

இன்னும் சில நிறுவனங்கள் ராமநாதபுரத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தி மையங்கள் அமைக்க போகின்றன. வரும் காலத்தில் மின்சாரத்தில்தான் வாகனங்கள் ஓடப்போகும் நிலையில், ராமநாதபுரத்திற்கு சுக்கிர திசை தொடங்கி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சூரிய ஒளி மின் உற்பத்தி நிறுவனங்கள் அதிகரித்ததால், தூத்துக்குடி போல் விரைவில் பொருளாதார மையமாக மாறும் வாய்ப்பு உள்ளது.

குறிப்புச் சொற்கள்