திரிஷா பற்றி அவதூறு: மன்னிப்பு கோரிய அதிமுக பிரமுகர்

சென்னை: நடிகை திரிஷா குறித்து தாம் தெரிவித்த கருத்துகளுக்காக பகிரங்க மன்னிப்பு கோருவதாக அதிமுக முன்னாள் நிர்வாகியான ஏ.வி.ராஜூ தெரிவித்துள்ளார்.

தாம் அவதூறாக பேசி விட்டதாக சிலர் தவறான தகவலை பரப்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்த ஒரு திரைப்பட நடிகை குறித்தும் தாம் தவறாக ஏதும் பேசவில்லை என்றும் தமது கருத்துகளால் சம்பந்தப்பட்டவர்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்க வேண்டும் என்றும் ராஜூ கூறியுள்ளார்.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் இவர், திரிஷா குறித்து அவதூறாகப் பேசியதாகப் புகார் எழுந்துள்ளது.

இதற்கிடையே திரைப்பட இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, சேரன், பேரரசு, நடிகர் மன்சூர்அலிகான், விஷால் உள்ளிட்ட பலரும் திரிஷா குறித்து அவதூறாகப் பேசியதாக ஏ.வி.ராஜூவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அவரை கைது செய்ய வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பில் சட்டரீதியாக செயல்பட இருப்பதாக நடிகை திரிஷா கூறியுள்ளார்.

கீழ்த்தரமான, கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவெறுப்பாக உள்ளது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!