விரைவு அஞ்சல் மூலம் ஓட்டுநர் உரிமம்

சென்னை: தமிழகத்தில் இனி ஓட்டுநர் உரிமமும் பதிவுச்சான்றுகளும் விண்ணப்பதாரர்களுக்கு விரைவு அஞ்சல் மூலமாகவே அனுப்பி வைக்கப்படும்.

சென்னை கிண்டியில் ரூ.41.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய போக்குவரத்து ஆணையரகம் மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை (பிப்ரவரி 28) திறந்து வைத்தார்.

அத்துடன், பதிவுச்சான்று மற்றும் ஓட்டுநர் உரிமத்தை விரைவு அஞ்சல் மூலமாக அனுப்பும் புதிய சேவை முறையையும் அவர் தொடங்கிவைத்தார்.

இதனையடுத்து, தமிழகத்தில் உள்ள 91 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் 54 பகுதி அலுவலகங்களில் இருந்து ஒப்புதல் அளிக்கப்படும் பதிவுச் சான்றும் ஒட்டுநர் உரிமமும் இனி விரைவு அஞ்சல் மூலமாகவே அனுப்பி வைக்கப்படும் என்றும் நேரடியாக வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்கள் இச்சேவையைப் பெறுவதற்கு தங்களது உண்மையான முகவரியையும் தங்களின் கைப்பேசி எண்ணையும் தங்களது ஒட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச்சான்று விண்ணப்பங்களில் தெளிவாக குறிப்பிடவேண்டும்.

‘வாகன்’ மற்றும் ‘சாரதி’ செயலிகளில் விண்ணப்பதாரர்கள் தங்களது முகவரியையும் கைப்பேசி எண்ணையும் தவறாகக் குறிப்பிட்டிருந்தால் பதிவுச்சான்றுகளும், ஒட்டுநர் உரிமங்களும் விரைவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய விண்ணப்பதாரர்கள் மீண்டும் ‘வாகன்’ மற்றும் ‘சாரதி’ செயலிகளில் தங்களது சரியான முகவரியையும் கைப்பேசி எண்ணையும் உள்ளீடு செய்து மீண்டும் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!