காரைக்கால்: திருநள்ளாறில் உள்ள திருநள்ளாறு ஸ்ரீ நளபுர நாயகி சமேத நள நாராயண பெருமாள் கோவிலில் கொடிமரம் முறிந்து விழுந்ததால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய பிரம்மோற்சவம் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை (3.3.2024) காலை 9 முதல் 10.30-க்குள் தொடங்குவதற்கான வழிபாடு நடைபெற்றது.
கொடி மரத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென கொடிமரம் முறிந்து விழுந்தது.
இது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உரிய பராமரிப்பு இல்லை என பக்தர்கள் பலரும் கோவில் நிர்வாகத்தைக் கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.