செங்கல்பட்டு: அரக்கோணம் அருகே உள்ள நெமிலி பகுதியில் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால, சோழர்கால துர்க்கை சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
கடந்த சில நாள்களாக அப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் மு.அன்பழகன் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
அங்கு கண்டெடுக்கப்பட்ட சிற்பத்தை நெமிலி மக்கள் ஏரிக்காவலர் என்று குறிப்பிடுகின்றனர். அந்தச்சிலை சிதைந்த நிலையில் காணப்படுகிறது.
இச்சிலை கி.பி. 12 அல்லது கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இச்சிலையின் தலைப்பகுதி சிதைந்துள்ளது. சிறிய அளவிலான பீடம் மட்டும் மண்ணுக்குள் புதைந்துள்ள நிலையில் நான்கு கைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
பின்புறக் கைகள் இரண்டும் முழுமையாக உடைந்துள்ளன. வலது கையின் தோள் பகுதி மட்டுமே காணப்படுகிறது என்று மு.அன்பழகன் தெரிவித்துள்ளார்.