ரூ.180 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கு: கணவனோடு மனைவியும் கைது

சென்னை: தலைநகர் சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.180 கோடி மதிப்பிலான போதைப்பொருளை ரயிலில் கடத்திய பிரகாஷ் என்பவரின் மனைவியையும் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பொதிகை விரைவு ரயிலில் கடந்த 1ஆம் தேதியன்று கடத்தப்பட்ட 30 கிலோ ‘ஐஸ்’ போதைப் பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனைக் கடத்தி வந்த பிரகாஷை கைது செய்தனர்.

இந்நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சென்னையில் உள்ள வீட்டின் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் இருந்தும் போதைப் பொருள்களை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பிரகாஷின் மனைவி மோனிஷாவிடமும் விசாரணை நடத்தி அவரையும் திங்கட்கிழமை காவலர்கள் கைது செய்தனர்.

இந்தச்சம்பவம் தொடர்பில், பிரகாஷின் நெருங்கிய நண்பர்கள், அவர்களது தொலைபேசி அழைப்புகள், வங்கிக் கணக்கு விவரங்கள் போன்றவற்றையும் காவலர்கள் சேகரித்து வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!