திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மாநிலங்களவையில் ஓர் இடம் ஒதுக்கீடு

சென்னை: திமுக கூட்டணியில் இணைந்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மாநிலங்களவையில் ஓர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கமல்ஹாசனும் கையெழுத்திட்டனர்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுக, இந்திய முஸ்லிம் லீக், கொ.ம.தே.க. கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம், திமுக இடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சு வார்த்தை எளிதில் முடிவடையாமல் இழுபறி நீடித்து வந்தது.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார் கமல்ஹாசன். இதையடுத்து மக்கள் நீதி மய்யத்திற்கு மாநிலங்களவையில் ஓர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் 2024 மக்களவைத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்தார்.

இத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தீவிர பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!