பாஜகவோடு இணைந்தது சமத்துவ மக்கள் கட்சி: சரத்குமார் திடீர் அறிவிப்பு

சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவோடு இணைப்பதாக அதன் தலைவரும் திரைப்பட நடிகருமான சரத்குமார் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், இந்தத் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த இணைப்பு விழா சென்னையில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

“ஒவ்வொரு தேர்தலின்போதும் எத்தனை தொகுதிகள் கிடைக்கும், எந்தெந்த தொகுதிகளில் போட்டி எனும் கேள்வியை கட்சியினர் எழுப்பி வந்தனர். இது என் மனதை வெகுவாகப் பாதித்தது.

“இந்நிலையில் நம்முடையை ஆதரவை பிரதமர் மோடிக்கு அளித்து மேலும் வலிமையோடு செயல்பட்டால் எப்படி இருக்கும் என்று தோன்றியது.

“காலஞ்சென்ற முதல்வர் காமராஜரை போல பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார். நாட்டின் வளர்ச்சிக்காகவும் இளையர்களின் நலன் கருதியும் சமத்துவ மக்கள் கட்சியை பாரதிய ஜனதாவுடன் இணைக்கிறேன்,” என்று இணைப்பு விழாவில் பேசியபோது சரத்குமார் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!