மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை 2026க்குள் கட்டி முடிக்கப்படும் என மத்திய அரசு உறுதி

மதுரை: எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்குள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்துள்ளார்.

அதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் என்றும் அதன் பிறகு எந்தவிதமான கட்டுமானப் பணிகளும் நடக்கவில்லை என்றும் அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கட்டுமானப் பணியின் உண்மை நிலையை மறைத்து பொய் அறிக்கையை வெளியிடும் அரசு அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு நாடாளுமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் கொண்டு வர உத்தரவிட வேண்டும் என்றும் ரமேஷ் வலியுறுத்தி உள்ளார்.

மத்திய அரசின் வழக்கறிஞர் வாதிடுகையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடப் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளி ஒதுக்கீடுப் பணி நிறைவடைந்துவிட்டது என்றும் 2026இல் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இதையடுத்து வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நீதிபதி அறிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!