தமிழக மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

நாகை: தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதனால் புதுக்கோட்டை மீனவர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மீனவர்களில் 22 பேர் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன் பிடித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

கைதான மீனவர்கள் சென்ற மூன்று விசைப்படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அனைவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர் என்று ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதை ஆகியுள்ளது. மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!